சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் திங்கள் வெளியாகும்!

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் திங்கள் வெளியாகும்!

editor 2

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தரா தர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

452,979 விண்ணப்பதாரர்கள் பங்கு பற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடை பெற்றது.

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றினர்.

பெறுபேறுகள் வெளியானதும் doenets.lk மற்றும் results.exams.gov.lk
ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Share This Article