மனிதப் புதைகுழி; இலக்கத்தகடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க நீதிமன்றம் உத்தரவு!

மனிதப் புதைகுழி; இலக்கத்தகடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க நீதிமன்றம் உத்தரவு!

editor 2

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட இலக்கத் தகடுகள் தொடர்பில் உரிய முறையில் பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

இது குறித்து சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு நேற்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தவை வருமாறு,

‘சட்ட மருத்துவ அதிகாரியால் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்கதகடு இலக்கங்களும், ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்ட இலக்கங்களும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த இலக்கங்களை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அதனை உரிய முறையில் அறிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

இதன்படி, அதுபற்றி அறிவுள்ளவர்கள் நீதிமன்ற பதிவாளருக்கு அது சம்பந்தமாக தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்று தெரிவித்த அவர்,

‘இன்றைய (நேற்று) வழக்கு விசாரணையின்போது ராஜ்சோமதேவா வின்
இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும் மேலும் தெரிவித்தார்.

Share This Article