யாழில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்!

யாழில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்!

Editor 1

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – தனங்களப்புப் பகுதியை சேர்ந்த 41 வயது
நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர், கடந்த 26ஆம் திகதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பஸ் மோதி படுகாயமடைந்தார். சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு தொடர்ந்து சிகிக்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் உயிரிழந்தார்.

Share This Article