புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை முன்னெடுக்க ஆர்வம்; அனுரவுக்கான வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி!

புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை முன்னெடுக்க ஆர்வம்; அனுரவுக்கான வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி!

Editor 1

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு, சீன மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக, ஜனாதிபதி ஜி ஜின்பிங், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்களுடன் பாரம் பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், புதிய பட்டுப்பாதை திட்டத்தில், வெற்றிகரமான விடயங்களை முன்னெடுப்பதற்கும் ஆர்வமாக உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் –

சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் இலங்கையும் சீனாவும் பாரம்பரிய
நட்பு அயல்நாடுகள். இரு நாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி, 67 வருடங்களாகின்ற நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மிக்க சகவாழ்வு, நாடுகளுக்கு இடையிலான, பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய விடயங்கள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான சிறந்த உதாரணங்கள் ஆகும். நான், இலங்கை-சீன உறவுகளுக்கு பெரும் முக்கியத்துவத்தை வழங்குகின்றேன்.

உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், புதிய பட்டுப்பாதை திட்டத்தில், வெற்றிகரமான விடயங்களை முன்னெடுப்பதற்கும் ஆர்வமாக உள்ளேன் – என குறிப்பிட்டுள்ளார்.

Share This Article