யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

Editor 1

கடற்றொழிலுக்கு சென்றவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் இன்று காலை வரை திரும்பி வரவில்லை.

இந்நிலையில் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்தனர்.

சடலத்தின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article