அரியநேத்திரனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் மாவை!

அரியநேத்திரனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் மாவை!

editor 2

தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவினையும் வாழ்த்தினையும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு பிராந்திய அலுவலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (15) மாலை நேரில் சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனை சந்தித்து சுமார் 30 நிமிடங்களாக அவருடன் கலந்துரையாடியதுடன், தனது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பில் தற்போதைய சூழ்நிலை, தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியானார். இந்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன் மற்றும் பொதுகட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article