புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

editor 2

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ள நிலையில், பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக
பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை 3 இலட்சத்து 23 ஆயிரத்து 879 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

தமிழ் பிரிவில் 79 ஆயிரம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 2 ஆயிரத்து 849 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்கவேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article