அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்க தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சிக்கிளை தீர்மானம்!

அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்க தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சிக்கிளை தீர்மானம்!

editor 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தங்களது தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் முன்வைப்பதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தங்களது தீர்மானத்தை அறிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் ஒன்றையும் அவர்கள் அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

Share This Article