அவுஸ்திரேலியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையர்! நீதிமன்று உறுதிப்படுத்தியது!

அவுஸ்திரேலியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையர்! நீதிமன்று உறுதிப்படுத்தியது!

editor 2

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்தமையை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

மெல்பேர்னில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் தாக்கி அப்பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே அவரை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் வாதாடி இருந்தார்.

எவ்வாறாயினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல்பேர்ன் உயர்நிதிமன்றம் தெரிவித்தது.

Share This Article