வவுனியாவில் கடத்தப்பட்ட பெண்ணை பொலிசார் மீட்டனர்!

வவுனியாவில் கடத்தப்பட்ட பெண்ணை பொலிசார் மீட்டனர்!

editor 2

வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்பப் பெண்ணெருவரை மீட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் நால்வரை நேற்று(29) பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா, கொக்குவெளி பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக அப்பெண்ணின் மாமியார் செய்த முறைப்பாட்டுக்கமைய அக்கும்பலைக் கைதுசெய்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தலைமை குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட காவல் துறையினர் குறித்த மகிழுந்து சென்ற பாதையில் பின்தொடர்ந்து சென்று அதனை பளை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்ததுடன், குறித்த பெண்ணையும் மீட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணத்தின் மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This Article