ஜனவரி முதல் அரச ஊழியர்களின் வேதனம் அதிகரிப்பு!

ஜனவரி முதல் அரச ஊழியர்களின் வேதனம் அதிகரிப்பு!

editor 2

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் ரூ. 55,000 ஆக உயர்த்தப்படுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கம் தயாரித்துள்ள பாதீட்டுக்கு அமையத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் முறைகளின் ஊடாக ஆசிரியர்களின் வேதனத்தினை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share This Article