யானை தாக்கியதில் அம்பாறையில் ஒருவர் மரணம்!

யானை தாக்கியதில் அம்பாறையில் ஒருவர் மரணம்!

editor 2

அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் ஆமைவெட்டை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். 

நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 

வயலில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, நிந்தவூர் பகுதியில் நேற்று முன்தினம் யானை தாக்குதலுக்கு இலக்காகி 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article