யானைகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு அம்பாறை மக்கள் கோரிக்கை!

யானைகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு அம்பாறை மக்கள் கோரிக்கை!

editor 2

அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அம்பாறையின்
கரையோரப் பிரதேசங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை, மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க துறைசார் அதிகாரிகள் விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் சிறுபோக வேளாண்மை அறுவடை தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களின் காட்டுப் பகுதியில் வசித்து வந்த காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக காரைதீவு
பிரதேசம் வரை படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இதனால் இரவு வேளைகளில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி , கல்முனை – அம்பாறை பிரதான வீதிகளில் தனியாக மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கூட்டமாக வரும் காட்டு யானைகள் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், குடியிருப்புகளுக்கும் பயனுள்ள தென்னை மரங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில் காட்டு யானைகளின் படையெடுப்பை கட்டுப்படுத்துமாறு வன விலங்குதுறை
அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article