தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேலும் MP கள் இருவர் கட்சி தாவுகின்றனர்?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேலும் MP கள் இருவர் கட்சி தாவுகின்றனர்?

editor 2

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக
பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஒன்றாக வெற்றி கொள்வோம் என்னும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் திகாம்பரம் எம்.பி உள்ளடங்கலாக நால்வர் உள்ளனர்.

அவர்களில் இருவர் ரணிலுடன் இணைவர். ஏஞ்சிய இருவர் எம்முடன் இணைந்தாலும் இணையாவிட்டாலும் நாம் மலையத்தை வெற்றி கொள்வோம்.

அதேபோன்று தமிழ் மக்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கே உள்ளது. தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் ரணிலுக்கே ஆதரவை வழங்குவர் என்றார்.

Share This Article