யானைகள் கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

யானைகள் கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

editor 2

திட்டமிடப்பட்ட வகையில் யானைகள் கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை மறுதினம் வரை 3,130 கணக்கெடுப்பு நிலையங்களில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்துடன் அரச அதிகாரிகளும், முப்படையினரும் இணைந்து இந்த பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இறுதியாக இலங்கையில் 2011 ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 5,879 ஆக பதிவு செய்யப்பட்டது.

Share This Article