உந்துருளியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் யாழில் மரணம்!

உந்துருளியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் யாழில் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் மாதகல் – பொன்னாலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தனது சகோதரனுடன் உந்துருளியில் பயணித்த குறித்த பெண் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 33 வயதுடைய பெண் ஒருவரே பலியானார்.

Share This Article