திருமலையில் ஒருவர் சுட்டுக்கொலை!

திருமலையில் ஒருவர் சுட்டுக்கொலை!

editor 2

திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காவந்திஸ்ஸ புர, ஸ்ரீ புர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது மூன்று முறை டி 56 ரக துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டுபாயில் இருக்கும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு பட்டியிருக்கலாம் என ஸ்ரீபுர பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

Share This Article