யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் நேற்றுக்காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
காலை 06.15 மணியளவில் அச்சுவேலி மருத்துவமனை வீதியூடாக தனது கடையைத் திறப்பதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை இடைவழியில் மறித்த இனந்தெரியாத கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் பொல்லுகளால் கடுமையாக தலை, கை என்பவற்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி மறைத்திருந்ததாக தெரியவருகிறது.
தாக்குதலுக்குள்ளானவர் அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்கு முன்பாக உணவகமொன்றை நடத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (வயது
-54) என்பவர் ஆவார்.
காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.