யாழில் வீடுகள் மீது வன்முறை; மூவர் கைது!

யாழில் வீடுகள் மீது வன்முறை; மூவர் கைது!

editor 2

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீக்கிரையாக்கிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மூன்று சந்தேகநபர்களே யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மூன்று உந்துருளிகள், இரண்டு வாள்கள், நான்கு பெற்றோல் குண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாகவே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This Article