தமிழ் பொதுவேட்பாளர் யோசனை மிகவும் மோசமானது எனவும் அது தமிழர் பிரச்சினையை பலவீனப்படுத்தும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தமிழர் பிரச்சினைகள் குறித்து செய்தி அனுப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய தேர்தலும் அல்ல, சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பும் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,
எதிர்வரும் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் மிகவும் மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என தெரிவித்த அவர், இது ஒரு முட்டாள்தனமான யோசனை எனவும், இதனை நாங்கள் பகிரங்கமாக கண்டித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி, ஏற்கனவே இரண்டு வேட்பாளர்களுடன் பேசியுள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை கட்சி விரைவில் முடிவு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.