வவுனியா – மன்னார் வீதியில் விபத்து! மூவர் படுகாயம்!

வவுனியா - மன்னார் வீதியில் விபத்து! மூவர் படுகாயம்!

editor 2

வவுனியா – மன்னார் பிரதான வீதியின் பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டானிச்சூர் பகுதியிலிருந்து பயணித்த 2 உந்துருளிகள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 2 உந்துருளிகளும் கடுமையாகச் சேதமடைந்ததுடன், அதில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 27,18 மற்றும் 17 வயதுகளையுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article