யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்று மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில், அதனை நிறுத்தக்கோரிய போது மறுக்கப்பட்ட நிலையிலேயே மோதல் வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.