சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்!

editor 2

இலங்கைப் பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக குறித்த பதவியை வகித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதையடுத்து அந்தப் பதவிக்கு வெற்றிடம் நிலவியது.

அதன்படி, குறித்த வெற்றிடத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவும் இலங்கை பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவும் செயற்படுவாரெனத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மறு அறிவித்தல் வரை அவர் இந்தப் பதவியில் நீடிப்பாரென இன்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அமர்வின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This Article