நெடுந்தீவுக் கடற்பரப்பில் இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்து! இந்திய மீனவர் ஒருவர் மரணம்!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்து! இந்திய மீனவர் ஒருவர் மரணம்!

editor 2

சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருடைய படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த படகில் இந்திய மீனவர்கள் நால்வர் பயணித்துள்ளனர்.

அவர்களைக் கைது செய்வதற்கு இலங்கை கடற்படை முயற்சித்த போது, மீனவர்கள் பயணித்த படகு கடற்படையினரின் படகுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஏனைய மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள மீனவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Share This Article