நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் ஐந்து பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – உதய கம்மன்பில!

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் ஐந்து பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி - உதய கம்மன்பில!

editor 2

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் ஐந்து பேர் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர்
உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துதெரிவித்த அவர்,

‘ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேம தாஸ, அனுரகுமார திஸநாயக்க, விஜயதாஸ ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்தில் வலி
மையானவர்கள். இவர்கள் ஐவருக்கும் பொதுவான காரணி ஒன்று உள்ளது. இவர்கள் நல்லாட்சியின் தலைவர்கள். ஏனெனில், அநுரகுமார திஸாநாயக்க நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புக் குழுவின் தலைவராகவும் இருந்தவர்.

இன்றும் ஜனாதிபதியும் அநுரகுமார திஸ நாயக்கவும் எங்களிடம் பைல் (கோப்பு)இருக்கிறது என்று இரு பக்கங்களும் வாசிக்கிறார்கள்.

விஜயதாஸ ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர். சரத் பொன்சேகா நல்லாட்சி அரசாங்கத்தின் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர். சஜித் பிரேமதாஸ நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர். இந்த ஐவரும் ஒன்றிணைந்து 69 இலட்சம் மக்களை தோற்கடித்த நல்லாட்சி அரசாங்கத்தை
பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.

இவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஒரே சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவர்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்றால், 2019 ஆண்டில் 69 இலட்சம் மக்கள் ஒன்றி
ணைந்து அரசாங்கத்தை தோற்கடித்தது வீணாகிறது. அவ்வாறெனில், தொடர்ந்
தும் அவர்களையே ஆட்சி புரிய வைத்திருக்கலாம்’ என்றார்.

Share This Article