அம்பாறையில் வயோதிபர் அடித்துக் கொலை!

அம்பாறையில் வயோதிபர் அடித்துக் கொலை!

Editor 1

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது 09 பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது குறித்த நபர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது 9 மற்றும் சாய்ந்தமருது 16 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article