வடமராட்சி கிழக்கில் சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது!

வடமராட்சி கிழக்கில் சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது!

editor 2

வடமராட்சி கிழக்கு – குடத்தனையில் நேற்று அதிகாலை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

மருதங்கேணி பொலிஸார், இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இவர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை, வழிப்பறி, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கைதானவர்களை தடுத்து வைத்து விசாரித்து வரும் மருதங்கேணி பொலிஸார் அவர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This Article