யாழில் சுண்ணாம்பு சூளையில் பணியாற்றிய குடும்பஸ்தர் மரணம்!

யாழில் சுண்ணாம்பு சூளையில் பணியாற்றிய குடும்பஸ்தர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணத்தில் சுண்ணாம்பு சூளையில் வேலை செய்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளர்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இளவாலை விளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில், அதே இடத்தைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் நேற்று சுண்ணாம்பு சூளையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்தார்
என்று தெரிவிக்கப்பட்டது.

மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share This Article