மாங்குளத்தில் விபத்து! மூவர் மரணம்!

மாங்குளத்தில் விபத்து! மூவர் மரணம்!

editor 2

முல்லைத்தீவ மாவட்டம் மாங்குளம் – பனிக்கங்குளம் பகுதியில் நேற்றிரவு (25) ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் தரித்திருந்த பார ஊர்தி ஒன்றின் மீது கொழும்பு – யாழ்ப்பாணம் வழித்தட தனியார் பேருந்து மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதி அருகே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Share This Article