ஒக்ரோபர் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

ஒக்ரோபர் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Editor 1

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நிதி இராஜாங்க
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் மாதம் முதல் பல கட்டங்களாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும். முதலில் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி
வழங்கப்படும். பின்னர் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

இதற்கு அடுத்தபடியாக சிறிய ரக கார்களும் இறுதியாக சொகுசு மற்றும் சுப்பர் சொகுசு வாகனங்களும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது அரசின் கொள்கையாக இருக்கும்.

அத்துடன், புத்தம் புதிய வாகனங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

மேலும், பொதுத்துறை ஊழியர்கள் வரியில்லா திட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் உடனடியாக பரிசீலிக்காது – என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேநேரம் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article