யாழில் நகை திருடிய பெண் சிக்கினார்! கொழும்பைச் சேர்ந்தவர்!

யாழில் நகை திருடிய பெண் சிக்கினார்! கொழும்பைச் சேர்ந்தவர்!

Editor 1

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகைதந்த பக்தர்களிடமிருந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் சுமார் ஒரு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பூந்தோட்டத்தில் வசித்துவரும் 27 வயதுடைய குறித்த பெண் கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருடப்பட்ட தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் கைதான பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

Share This Article