ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கிறார் விஜயதாஸ!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கிறார் விஜயதாஸ!

Editor 1

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவது உறுதி’, என்று அமைச்சர் விஜய தாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டாளர்களுடனான சந்திப்பு கொழும்பு – கொடகமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதிர்வரும் சில நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும். நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். சுதந்திர கட்சி அரசாங்கத்தை அமைக்கவும் தயாராக உள்ளோம்’ என்று இதன்போது விஜதாஸ கூறினார்.

மேலும், சிறீ லங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நிறுத்தப்படுவார் என்று அந்தக் கட்சியின் முன்னாள்
தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமது கட்சியில் இருந்து கொண்டு வேறொரு கட்சியின் தலைமையை பெற்றுக் கொண்டமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறீ லங்கா பொது ஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்
சாகர காரியவசம் கூறியிருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

Share This Article