சாவகச்சேரியில் சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

சாவகச்சேரியில் சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

Editor 1

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கிணறு ஒன்றிலிருந்து ஆறு வயதுச் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெற்றோர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய போது சிறுவனைக் காணவில்லை என்று தேடிய நிலையில் கிணற்றில் சிறுவனின் சடலம் காணப்பட்டுள்ளது.

கிணற்று வாளியின் கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டதால், தண்ணீர் அள்ள முயற்பட்டபோது அது அறுந்து சிறுவன் கிணற்றினுள் விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 6 வயது சிறுவன், கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். 

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சனிக்கிழமை (01) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாவகச்சேரி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

Share This Article