ரணில் ஆட்சியில் திருப்தியில்லை என்கிறார் அஜித் மன்னப்பெரும!

ரணில் ஆட்சியில் திருப்தியில்லை என்கிறார் அஜித் மன்னப்பெரும!

Editor 1

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தினாலும் திருப்தியடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

உண்மையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக் கூடிய சிறந்த குழு ஐக்கிய மக்கள்
சக்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதியிடம் திறமையான அணி இல்லை எனத் தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் நாட்டை அபிவிருத்தி செய்யும் குழுவுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறினார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மன்னப் பெரும மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

மழை பெய்தால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது செவிடாகவும் ஊமையாகவும் மாறியுள்ளது.

நீர் மின் உற்பத்தியின் பயனை மக்களுக்கு வழங்கவேண்டும்.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் புதிய சித்தாந்தம் காணப்படுகிறது. அது எவ்வாறான தேர்தல் என்பது குறித்து நாட்டுக்கு தெரியாது.

பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு கோருவதற்காகவே பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ளார்.

அரசாங்கம் நாட்டு மக்களை வாழவைக்காமல் அவர்களின் சொந்த நலனுக்காக செயல்படுகின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

இலவசக் கல்வி, சுகாதாரம் இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், அரச பல்கலைக்கழகப் பாடசாலைகள் வீழ்ச்சி யடைந்துள்ள போதிலும், தனியார் பல்கலைக்கழகங்களும் வைத்தியசாலைகளும் சிறப்பாகச் செயற்படுகின்றன-என்றார்.

Share This Article