வடக்கில் பட்டதாரிகள் 400 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குகிறார் ஜனாதிபதி!

வடக்கில் பட்டதாரிகள் 400 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குகிறார் ஜனாதிபதி!

Editor 1

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பட்டதாரிகள் 400 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளார்.

யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாணக் கல்வி அமைச்சினால் நேற்று திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Share This Article