குழந்தையை பிரசவித்த 15 சிறுமி மருத்துவமனையிலேயே, அந்தக் குழந்தையை கைவிட்டுச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி – துன்னாலையை சேர்ந்த சிறுமியே இவ்வாறு குழந்தையை கைவிட்டு சென்றார் என்று மருத்துவமனை பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை மாலை தனது தாயாருடன் வந்த சிறுமி பிரசவத்துக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு அவருக்கு குழந்தை பிறந்தது. நேற்று சனிக்கிழமை காலை சிறுமியும் அவரின் தாயாரும் குழந்தையை மருத்துவமனையிலேயே கைவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.