டயானா கமகே வெளிநாடு செல்லத் தடை!

டயானா கமகே வெளிநாடு செல்லத் தடை!

Editor 1

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  வியாழக்கிழமை (09) டயானா கமகேவுக்கான இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்தது. 

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் பிரதிகள் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article