நான்கு மாதங்களில் 22 ஆயிரம் பேருக்கு டெங்கு தொற்று!

நான்கு மாதங்களில் 22 ஆயிரம் பேருக்கு டெங்கு தொற்று!

Editor 1

வருடத்தின் முதல் நான்கு மாதங்களில்  22, 443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, டெங்கு நோயினால் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது . 

மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன்  எண்ணிக்கை 8071 ஆகும். 

மேலும், வடக்கு மாகாணத்தில் 4375 பேரும், மத்திய மாகாணத்தில் 1890 பேரும், வடமேற்கு மாகாணத்தில் 1616 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 1855 பேரும், தென் மாகாணத்தில் 1723 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

Share This Article