இன்று அதிக வெப்பம்; அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

இன்று அதிக வெப்பம்; அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

Editor 1

நாட்டில்  பல பிரதேசங்களில் வெப்பம்  இன்று  சனிக்கிழமை அதிகரித்துக் காணப்படுவதால் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண்  அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

மேலும், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் . 

அத்துடன்,  இந்த பகுதிகளில் அதிக வெப்பம் நிலவுவதால் வெப்பப் பிடிப்புகள்  , வெப்ப சோர்வு நிலை போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . 

போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் , முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்று  அறிவிக்கப்பட்டுள்ளது .

Share This Article