சாதாரண தரப்பரீட்சை அனுமதி அட்டைகளில் பாரிய குளறுபடிகள்!

சாதாரண தரப்பரீட்சை அனுமதி அட்டைகளில் பாரிய குளறுபடிகள்!

Editor 1

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான நுழைவு அட்டைகளில் பாரிய குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யாத பாடங்களை குறிப்பிட்டு நுழைவு அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அநேகமான நுழைவு அட்டைகளில் பரீட்சார்த்தியின் மொழிமூலம் மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை நுழைவு அட்டைகள் கணினி மயப்படுத்தப்படும்போது ஏற்பட்ட தவறு காரணமாக இவ்வாறு பரீட்சை நுழைவு அட்டைகளில் பல்வேறு குளறுபடிகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் தடவையாக தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நுழைவு அட்டைகளிலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கணித பாட பரீட்சைக்கு மட்டும் தோற்றும் பரீட்சார்த்திகளின் நுழைவு அட்டைகளில் விஞ்ஞான பாடமும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article