திருமலை நகரில் விபத்து; மாணவி படுகாயம்!

திருமலை நகரில் விபத்து; மாணவி படுகாயம்!

Editor 1

சைக்கிளில் சென்ற மாணவியை ஹை ஏஸ் வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலை நகரின் இராஜவரோதயம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15
வயது பாடசாலை மாணவியே படுகாயமடைந்தார்.

நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் அறிய வருவதாவது,

மாணவி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஹை ஏஸ் வாகனம் மாணவியை மோதியது.

படுகாயமடைந்த மாணவி திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில், ஹை ஏஸ் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article