மன்னாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் இந்தியாவிற்கு தப்பினார்!

மன்னாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் இந்தியாவிற்கு தப்பினார்!

Editor 1

தலைமன்னாரில் 8 வயதுச் சிறுமி பாலியல் வன் கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேகநபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா
மருத்துவமனையிலிருந்து தப்பித்து இந்தியா சென்றுள்ளார். என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றில் உரையாற்றியபோhதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாலியல் வன்கொடுமை படுகொலை போன்ற குற்றங்களை செய்த நபரை பொலிஸார் வவுனியா எப்படி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்கள்?
இதில்தான் மர்மம் உள்ளது. இந்நபர் அந்த கிராமத்திலுள்ள தென்னந் தோட்டத்தில் வேலை செய்துள்ளார். தொழிலை பெறவரும்போது தனது பெயர் விஜேந்திரன் என்றும் அந்த தென்னந் தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்து அந்தக்
கிராமத்தில் வாழ்ந்துள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் தான் தெரியும் அவரின் பெயர் அப்துல் ரகுமான் என்பது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த ஒரு நபரை பொலிஸார் எவ்வளவு அலட்சியமாக தப்ப விட்டுள்ளனர். வவுனியா சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தப்பிக்க விட்டுள்ளனர்.

இது தொடர்பில் நீதி அமைச்சரின் பதில்என்ன? – என்றார்.

Share This Article