படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மன்னாரில் இளம் குடும்பஸ்தர் மரணம்!

படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மன்னாரில் இளம் குடும்பஸ்தர் மரணம்!

Editor 1

மன்னார் மாவட்டம் – முத்தரிப்புத்துறையில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவமானது இன்று புதன்கிழமை(24) காலையில் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

Share This Article