மட்டக்களப்பில் நண்பர்கள் கை கலப்பு! ஒருவர் மரணம்!

editor 2

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபர் கைது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article