மனைவியை வெட்டிய கணவன் தலைமறைவு! யாழில் சம்பவம்!

மனைவியை வெட்டிய கணவன் தலைமறைவு! யாழில் சம்பவம்!

editor 2

மனைவியை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு கணவர் தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், படுகாய மடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவான நிலையில்
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Share This Article