நித்திரையிலிருந்த இளைஞர் மீது வாள்வெட்டு!

நித்திரையிலிருந்த இளைஞர் மீது வாள்வெட்டு!

editor 2

நித்திரையிலிருந்த இளைஞர்மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் திருகோணமலை – மொறவெவ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர் நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி தனியாக உறங்கியுள்ளார்.

அப்போதே வீட்டுக்குள் நுழைந்தவர்கள் அவரை வெட்டியுள்ளனர்.

இதில் 27 வயதான இளைஞர் காயமடைந்தார். அங்கிருந்து தப்பிய அவர் தனது சகோதரிக்கு தெரிவித்து அவர் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Share This Article