பேருந்துச் சாரதியின் போதை; ஆனையிறவில் காயமடைந்த மற்றொருவர் மரணம்!

பேருந்துச் சாரதியின் போதை; ஆனையிறவில் காயமடைந்த மற்றொருவர் மரணம்!

editor 2

ஆனையிறவில் இடம்பெற்ற இ. போ. ச. பேருந்து மற்றும் ஹைஏஸ் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி அதிகாலை இ. போ. ச. பேருந்து ஒன்று மாடுகளை மோதித் தள்ளியவாறு
ஹைஏஸ் வாகனத்தை மோதியது. இதில், வெளிநாட்டுக்கு கணவரையும் மகனையும் அனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்தார்.

இரு சிறுவர்கள் உட்பட எண்மர் காயமடைந்திருந்தனர். இதில், ஐவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மாடுகளை ஆனையிறவில் இருந்து இரணைமடுவுக்குகொண்டு சென்றுகொண்டிருந்த இளம்குடும்பஸ்தரும் படுகாயமடைந்திருந்தார். கிளிநொச்சி
ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் யாழ். போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.

இதேவேளை, இ. போ. ச. பேருந்து சாரதி அளவுக்கு அதிகமான மதுபோதையில் காணப்பட்டமையே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Share This Article