யாழ்.சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 16 பேர் விடுதலை!

editor 2

நத்தார் பண்டிகையை ஒட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் 16 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் ஆயிரத்து நான்கு பேர் இன்று விடுதலை செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையிலேயே கைதிகள் 16 பேரும் யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து காலை 9 மணிக்கு  சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.

Share This Article