கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கையும் அறிவுறுத்தல்களும்!

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கையும் அறிவுறுத்தல்களும்!

editor 2

பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான ‘ஆம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அவர் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் இருங்கள்

வயல் வெளி, தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

திறந்த வெளியில் கைத்தொலைபேசிகளை உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது

மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகு போன்றவற்றை பயன்படுத்தவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்

கடும் காற்றினால் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதால் விழப்புடன் இருங்கள்

அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரியின் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

Share This Article