இலங்கை வரும் இங்கிலாந்தின் பெண்கள் அணியில் தமிழ்ப் பெண்!

editor 2

யாழ்ப்பாணம் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேன்குமார் அமுருதா இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இது தொடர்பிலான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அமுருதாவின் தந்தையார் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் போட்டித் தொடர் ஒன்றில் 145 ஓட்டங்களை அதிக ஓட்டங்களாப் பெற்றுக்கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,

இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள அமுருதா எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அணியில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article